உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ரசத்தின் ரசம்

0

Posted on : Sunday, February 14, 2010 | By : ஜெயராஜன் | In :

முல்லா வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர் வாத்து ஒன்றை பரிசாகக் கொடுத்தார்.அதை சமைத்து சாப்பிட்டார்கள்.அதன் பின் வரிசையாக முல்லா வீட்டுக்கு விருந்தினர் வர ஆரம்பித்தனர்.சிலர் வாத்துக் கொடுத்தவரின் நண்பர் என்றனர்.இன்னும் சிலர் வாத்துக் கொடுத்தவரின் நண்பருக்கு நண்பர் என்று சொல்லிக் கொண்டனர்.எல்லோருமே அந்த வாத்தை தங்களுக்கும் சமைத்துப் போட வேண்டும் என்று கூறினர்.முல்லா இவர்களை எல்லாம் ஓரளவு சமாளித்தார் ஆனால் ஒரு நிலையில் பொறுமை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.ஒரு நாள் ஒரு புது ஆள் வந்தார்.''உங்களுக்கு வாத்து கொடுத்தவரின் நண்பருக்கு நண்பருக்கு நண்பன் நான்.''என்று சொல்லி விட்டு சாப்பாட்டுக்கு தயாராக உட்கார்ந்து விட்டார்.ஆவி பறக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து அந்தப் புது ஆளின் முகத்திற்கு முன் முல்லா நீட்டினார்.''என்ன இது?''என்று அவர் கோபத்துடன் கேட்டார்.'அதுவா?உங்கள் நண்பர் கொடுத்த வாத்தின் ரசத்தோட ரசத்தோட ரசம்,'என்றார் முல்லா.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment