உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

தண்டிப்பு

0

Posted on : Wednesday, February 03, 2010 | By : ஜெயராஜன் | In :

உங்கள் குழந்தை நீங்கள் ஒப்புக்கொள்ளாத ஒன்றைச் செய்து விடுகிறது.இப்போது குழந்தை செய்தது சரியா தவறா ?எது சரி,எது தவறு என்று யாருக்குத் தெரியும்?ஆனால் அது அல்ல சிக்கல்.ஒருதந்தையாகவோ தாயாகவோ இருந்து சிலவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.நீங்கள் எதை ஒப்புக் கொள்ளவில்லையோ,அவை தவறுகளாகிவிடுகின்றன.அது தவறாகவும் இருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம்.ஆனால் நீங்கள் ஒப்புக் கொள்வது தான் சரியாகி விடும்.அதனால் எல்லாமே உங்கள் ஒப்புதல்,நிராகரிப்புக்குள் அடங்கி விடுகிறது.
உங்கள் பார்வையில் ஒரு குழந்தை வழி தவறிப் போவதாகக் கருதினால்,நீங்கள் அதைத் தண்டிப்பீர்கள்.ஆழமான காரணம்,அது எதோ தவறு செய்து விட்டதால் அன்று,உங்களுக்கு கீழ்ப் படிய மறுத்ததுதான்.உங்களது அகங்காரம் காயப்பட்டு விடுவது தான் உண்மையான காரணம்.
குழந்தை உங்களிடம் முரண் படுகிறது.தன சுயத்தை நிலை நிறுத்திக் கொள்கிறது.உங்களிடம் முடியாது என்று சொல்லி விட்டதால்,அதிகாரம் கொண்ட தந்தை அதைக் கண்டிக்கிறார்.உங்கள் கர்வம் காயப்பட்டு விடுவதால்,தண்டித்தல் என்பது ஒரு வகையான பழி வாங்கல்தான்.
குழந்தை தவறு செய்தால் திருத்த வேண்டாமா? அதனால் தான் தண்டனை.தவறான வழியில் போனால் தண்டனை:உங்களைப் பின் பற்றினால் பரிசு!சரியான வாழ்வு என்பது இப்படித்தான் தரப்படுத்தப்பட்டுள்ளது.குழந்தையின் உரிமையாளர் நீங்கள் தான்.அது உங்களுக்கு அடிபணிய மறுத்தால்,சிரமப் பட வேண்டியது தான்!இப்படித்தான் நீங்கள் நியாயப் படுத்துவீர்கள்.
நியாயத்துக்கும் நியாயப்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.நியாயப் படுத்துவது என்பது ஒரு தந்திரமான உத்தி.உண்மையான காரணத்தை இது மறைத்து விடுகிறது.பொய்யானதை வெளிப் படுத்துகிறது.ஆனால் எல்லாமே நியாயமாக நடப்பது போல் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment