உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இந்தியர்கள்

0

Posted on : Tuesday, February 16, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் ஒரு பள்ளியைப் பார்வையிட ஆய்வாளர் வந்தார்.ஒரு சிறுவனைப் பார்த்து,''பூமியின் முதல் ஆண்மகன்,முதல் பெண்மணி யார்?''என்று கேட்டார்.
'ஆதாமும் ஏவாளும் என்றான் பையன்.
ஆய்வாளருக்கு மகிழ்ச்சி.''அவர்கள் இருவரும் எந்த நாட்டுக்காரர்கள்?''என்று மீண்டும் அவனையே கேட்டார்.
'இந்தியர்கள்'என்றான் பையன்.
ஆய்வாளர் சற்றே குழப்பத்துடன்,''எவ்வாறு அவர்கள் இந்தியர்கள் ஆனார்கள்?''என்று கேட்டார்.
'அது எளிது.தலைக்கு மேல் ஒரு கூரை இல்லை.உடுப்பதற்கு உடைகளும் இல்லை.உண்பதற்கோ இருவருக்கும் சேர்ந்து ஒரே ஒரு ஆப்பிள்.அப்படி இருந்து அதை சொர்க்கம் என்று நம்பினார்களே!அதனால் அவர்கள் இந்தியர்களாகத்தான் இருக்க வேண்டும்.'என்றான் பையன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment