உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மிச்சம் எவ்வளவு?

1

Posted on : Tuesday, February 09, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆசிரியர் ஒருவர் மாணவனிடம் ஒரு கணக்குச் சொல்லி விடை கேட்டார்.பையன் ஒரு ஆட்டிடையனின் பிள்ளை.
''பத்து ஆடுகள் இருக்கின்றன.ஒன்று மட்டும் வேலியைத்தாண்டி வெளியே குதித்து விட்டது.மிச்சம் எவ்வளவு ஆடுகள் இருக்கும்?''
'ஒன்றும் மிச்சம் இருக்காது,'என்றான் பையன்.
''அது எப்படி?என்ன கணக்கு அது?இருப்பது பத்து ஆடு.ஒன்று வெளியே குதித்து விட்டால் மிச்சம் எவ்வளவு?''என்று மீண்டும் கேட்டார் ஆசிரியர்.
'உங்களுக்குக் கணக்கு தெரிந்திருக்கலாம்.ஆனால் எனக்கு ஆடுகளைப் பற்றித் தெரியும்.விடை,ஒன்றுமில்லை என்பது தான்.'என்றான் பையன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

ஆம்.பையன் கூறுவது உண்மை

Post a Comment