உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிரிப்பது நல்லது

0

Posted on : Monday, February 22, 2010 | By : ஜெயராஜன் | In :

''புல்லைத்தின்றால் கண் நன்றாகத் தெரியும்.''
'எப்படிச் சொல்கிறாய்?'
''பாரேன்,எந்த மாடாவது கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கா?''
                                      ********
ஒரு நேர்முக சோதனையில்:
தேர்வர்:இரண்டும் இரண்டும்எவளவு?
முதல்வர்:நான்கு,சார்.
தேர்வர்:சரி நீங்கள் போகலாம் .(அடுத்தவரிடம்)இரண்டும் இரண்டும் எவ்வளவு?
இரண்டாமவர்:நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது தான்.
இரண்டாமவருக்கு வேலை கிடைத்தது.
                                    **********

''என்ன பிரமாதமான பாடகர்!அவர் குரல் அரங்கை நிரப்பி விட்டதே!''
'ஆமாம்,அந்த குரலுக்கு  இடம் கொடுப்பதற்காக  நம்மில் பலர் அரங்கிலிருந்து வெளியில் வரும்படி ஆகி விட்டதே!'
                                       ***********
ஒருவன் தனது கழுதையின் மீது நிறைய சுமை ஏற்றிச் சென்று கொண்டிருந்தான்.கழுதை அங்கங்கே நின்று கொண்டது.அவன் அதை நன்கு அடித்தான்.அதைப் பார்த்த ஒருவர் ,''கழுதையை ஏனப்பா இப்படி அடிக்கிறாய்?என்று கேட்டார்.அவன் பதில் சொல்ல வில்லை.அவன் ஒவ்வொருமுறை அடிக்கும் போதும் ஒவ்வொருவராக அடிக்க வேண்டாம் என்றனர்.அவன் அவர்கள் முன்னாலேயே திடீரென மண்டியிட்டு,'என்னை நீ மன்னிக்க வேண்டும்.உனக்கு சிபாரிசு செய்ய உன் உறவினர் இத்தனை பேர் வருவார்கள் என்று எனக்குத் தெரியாது.'என்று கழுதையிடம் சொன்னான்.
                                    *************
ஒரு விமானத்தில் பைத்தியங்கள் பயணம் செய்தனர்.அவர்களின் பலத்த கூச்சலில் பைலட்டினால் விமானத்தை செலுத்தக்  கடினமாக இருந்தது. இருக்கிறதிலேயே கொஞ்சம் பரவாயில்லாமல் தெரிந்த ஒரு பைத்தியத்தைக் கூப்பிட்டு ஒரு பத்து ரூபாயை அவரிடம் கொடுத்து,மற்ற பைத்தியங்கள் சப்தம் போடாமல் பார்த்துக் கொள்ள சொன்னார்.சற்று நேரத்திற்கெல்லாம் ஒரே அமைதி.பைலட்டால்  நம்ப முடியவில்லை.அந்த பைத்தியத்தை வரச்சொல்லி அவர் கையாண்ட வழியை சொல்லச்  சொன்னார்.அந்த பைத்தியம் சொன்னார்,''இந்தப் பயலுகள் எல்லாம் உள்ளேயிருந்து சப்தம் போட்டங்களா?நான் அவர்களிடம் கொஞ்ச நேரம் வெளியே போய் ஜாலியாக விளையாடிட்டு வாங்கன்னு சொல்லி வெளியே அனுப்பிட்டேன்.அவ்வளவுதான்.''
                                             ************
ஒரு தந்தை தன ஐந்து பிள்ளைகளுக்கும் பஞ்ச பாண்டவர்களின் பெயரை வைத்தார்.அவர்கள் போல் இவர்களும் சிறப்பாக வாழ வேண்டும் என்பது அவர் ஆசை.ஆண்டுகள் பல கழிந்தபின்,நண்பர் ஒருவர்,தந்தையின் ஆசை நிறைவேறியதா எனக்   கேட்டார். தந்தை சொன்னார்,''பேருக்குத் தகுந்த மாதிரியே நடந்து கொண்டனர்.'''அப்படியா,மகிழ்ச்சி'என்றார் நண்பர்.
தந்தை சொன்னார்,'ஆமாம் சொத்து பூராத்தையும் சூதாட்டத்திலேயே விட்டுட்டாங்க.'
                                       ************
ஒரு பெண்:என்னய்யா,போன தடவை நீ எடுத்த போட்டோவெல்லாம் அழகாய் இருந்தது.இப்போது என்ன ஆயிற்று உனக்கு?இப்போ எடுத்த போட்டோ சகிக்கலையே?
புகைப்படக்காரர்:உண்மை தான் அம்மா.போன தடவை நான் புகைப்படம் எடுத்த போதுஎனக்கு பதினைந்து வருடம் குறைவாக இருந்தது.இன்று எனக்கு வயதாகி விட்டது பாருங்கள்!அது தான் காரணம்.
                                       ***********
சேகரும் சோமுவும் காட்டிற்கு வேட்டையாடப் போனார்கள்.திடீரென பத்தடி தூரத்தில் ஒரு புலி!சேகர் ஓடுவதற்குத் தயாரானான்.''புலியை விட உன்னால் வேகமாக ஓட முடியும் என்று நம்புகிறாயா?என்று கேட்டான் சோமு.'அது அவசியமில்லை.உன்னைவிட வேகமாக ஓடினால் போதுமே!'என்றான்.
                                      *********
மனைவி:உங்க அம்மா அதைக் கொடுத்தேன்,இதைக் கொடுத்தேன் என்று குத்திக் காண்பித்துக் கொண்டேயிருந்தார்கள்,இல்லையா?இன்று அவர்கள் கொடுத்த பொருட்களையெல்லாம் அவர் மூஞ்சியிலே விட்டெறிந்து விட்டேன்.
கணவன்:பேஷ்,பேஷ்!
மனைவி:அதில் அம்மிக் குழவியும் ஒன்னு.
                                     ********
மாமியார்:ஏண்டி,மருமகளே!நீ வாங்கி வந்த கற்பூரத்தில் வாசனையே இல்லையே?
மருமகள்:கழுதைக்கு எப்படி மாமி கற்பூர வாசனை தெரியும்?
                                  *********

புதிதாக அமைச்சர் பதவி ஏற்றார் ஒருவர்.அவர் பயன்படுத்த ஒரு கார் அளிக்கப் பட்டிருந்தது.அவர் அந்தக் காரின் டிரைவரிடம்,''நீங்கள் சிறிது நேரம் ஓய்வுஎடுங்கள்.நான் சிறிது நேரம் காரை ஓட்டுகிறேன்.''என்றார்.
ஆனால் அதை ஏற்க மறுத்த டிரைவர்,'நீங்கள் ஓட்டுவதாக இருந்தால் நான் கீழே இறங்கிக் கொள்கிறேன்.ஏனெனில் இது கார்.நீங்கள் ஓட்ட நினைப்பதற்கு இது ஒன்றும் சர்க்கார் அல்ல.கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விடுவதற்கு.'என்றார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment