உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நாய் பிஸ்கட்

0

Posted on : Monday, February 15, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் இரவில் முல்லாவின் மனைவிக்கு பசியெடுத்தது.ஏதாவது தின்னக் கிடைக்குமா என்று பார்த்த போது ஒரு நாய் பிஸ்கட் தான் கிடைத்தது.அதை சாப்பிட்டதில் அது நன்றாகத் தான் இருந்தது.மறு நாள் அதை நிறைய வாங்கி வரச்சொல்லி முல்லாவிடம் சொன்னாள்.முல்லா கடையில் நிறைய நாய் பிஸ்கட் வாங்கினார்.கடைக்காரன்,''உங்கள் நாய் சிறியது தானே?இவ்வளவு எதற்கு?''என்று வினவினான்.
'நாய்க்கு அல்ல.என் மனைவிக்கு,'என்றார் முல்லா.
''ஐயோ,இது நாய்களுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும்.இதில் மெல்லக் கொல்லும் விஷம் இருக்கிறது.உங்கள் மனைவி இதை சாப்பிட்டால் செத்துப் போவார்.''என்றார் கடைக்காரர்.
ஆறு மாதங்களுக்குப் பின் முல்லாவின் மனைவி இறந்து போனார்.''நான் அப்போதே சொன்னேன்,நீங்கள் கேட்கவில்லை,''என்றான் கடைக்காரன்.
'இல்லை அந்த பிஸ்கட் அவளைக் கொல்லவில்லை.கார்களுக்குப் பின்னால் துரத்திக்கொண்டு ஓடியதால் காரில் அடிபட்டு இறந்து விட்டாள்,'என்றார் முல்லா.
சூழ்நிலை எப்படியிருந்தாலும் உங்கள் முடிவிலேயே நீங்கள் நிலைத்து நின்று விடுகிறீர்கள்.அது உங்கள் ஆணவத்திற்கு தளம் அமைத்துக் கொடுத்து விடுகிறது.அதன் மேல் உங்கள் மனம் நின்று கொள்கிறது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment