உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நல்லவர்

0

Posted on : Monday, February 15, 2010 | By : ஜெயராஜன் | In :

மனதின் அடியாழத்தில் எல்லோரும் நல்லவராகவே இருக்க விரும்புகிறார்கள்.நல்லவராக இருப்பதற்கு இரண்டு வழிகளுள்ளன.ஒன்று நல்லவராக இருப்பது.அது மிகவும் கடினம்.மற்றொரு வழி அடுத்தவர் தவறு என்று நிரூபித்து விடுவது.நீங்கள் நல்லவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.மற்றவனைத் திருடன்,கொலைகாரன்,கெட்டவன் என்று நிரூபித்து விடும் போது நான் நல்லவன் என்ற உணர்வு சட்டென்று வந்து விடுகிறது.இது மிகவும் எளிமையானது.பெரிது படுத்தப்பட்ட பிறர் தீமைக்கு முன்னால் நீங்கள் அப்பாவி போல் காணப் படுகிறீர்கள்.அதனால் தான்,யாராவது ஒருவர் இன்னொருவரைப் பற்றி,''அந்த ஆள் கெட்டவன்,''என்று சொல்லும் போது,நீங்கள் ஒன்றுமே சொல்லுவதில்லை.அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்கள்.அதோடு,'நானும் கூட அப்படித்தான் நினைத்தேன் ,'என்று சொல்லிவிடுகிறீர்கள்.
ஆனால்,யாராவது இன்னொருவரைப் பற்றி நல்லதாக ஏதாவது சொல்லி விட்டால்,நீங்கள் எதிர் வாதம் செய்கிறீர்கள்.அவர் கூற்றுக்கு ஆதாரம் கேட்கிறீர்கள்.கடவுளை நம்புவதற்கு ஆதாரம்கேட்பவர்கள் கூட சாத்தானை நம்புவதற்கு ஆதாரங்கள் கேட்பதில்லை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment