உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உத்தரவு

1

Posted on : Tuesday, February 09, 2010 | By : ஜெயராஜன் | In :

தளபதி ஒருவர்உறங்கும் பொது பெரிதாகக் குறட்டை விட்டதால் அவர் மனைவி தூங்க மிகவும் சிரமப்பட்டாள்.அவர் இடப்பக்கம் திரும்பிப் படுக்கும் போது தான் குறட்டை வந்ததாம். குறட்டை என்றால் அது சாதாரண குறட்டை அல்ல.உறுமல்.
அவள் உளவியல் மருத்துவரிடம் சென்றாள்.''இதென்ன பெரிய விஷயம்?குறட்டை விடும் போது அவரை வலப்பக்கம் திரும்பிப் படுக்கும்படி தள்ளி விடுங்கள்''என்றார் அவர்.
'ஐயோ,அது சிரமம்.அவர் ரொம்பத் தடியான ஆள்.தள்ள முடிவதில்லை .அப்படியே தள்ளினாலும் அவருக்கு கோபம் வருகிறது.எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டேன்.ஒன்றும் முடியவில்லை.'என்றாள் அவள்.
அது கேட்ட மருத்துவர் ,''கவலைப்படாதீர்கள்,அவர் காதருகே சென்று,'ரைட் டேர்ன்'என்று சொல்லி விடுங்கள்,அது போதும்,''என்றார்.
அந்த முறை வெற்றி பெற்று விட்டது.உத்தரவு என்றால் உத்தரவு தானே?அது அவர் மனதின் அடி ஆழத்தில் பதிந்திருந்ததால் அந்தக் கட்டளைக்குக் கீழ் படிந்தார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

Good One :)

Post a Comment