உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன் மொழிகள் (1)

0

Posted on : Monday, February 08, 2010 | By : ஜெயராஜன் | In :

இது எனது இருநூறாவது இடுகை
***********************************
பேசாத வார்த்தைக்கு நீ எஜமான்.
பேசிய வார்த்தை உனக்கு எஜமான்.
*******
வாக்குறுதி என்பது ஒரு வகையில் கடனே.
*******
பகிர்ந்த துன்பம் பாதியாகிறது.
பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது.
********
செய்யத்தெரிந்தவன் சாதிக்கிறான்.
செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்.
********
கோபம் என்பது ஒரு குட்டிப் பைத்தியம்.
********
வணங்க ஆரம்பிக்கும் போது வளர ஆரம்பிக்கிறோம்.
********
தவறு கூடு தலாய் இருந்தால் பிடிவாதமும் கூடுதலாய் இருக்கும்.
*********
உங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகம் பேசுகிறீர்களோ
அவ்வளவு அதிகம் பொய் சொல்ல நேரிடும்.
*********
நண்பன் என்பவன் உங்கள் குறைகளை எல்லாம் அறிந்தும்
உங்களை விரும்புபவன்.
********
ஒரு காரியம் சிரமமானது என்று பயப்படுகிறோம்.
உண்மையில் நாம் பயப்படுவதால் தான் அது சிரமமாகிறது.
*********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment