உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நாட்டுப்புறப்பாடல்

0

Posted on : Thursday, February 11, 2010 | By : ஜெயராஜன் | In :

முக்காலைக் கைப்பிடித்து,மூவிரண்டு போகையிலே
அக்காலை ஐந்து தலை நாகம் அழுந்தக் கடித்தால் பதூரதன்
புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் கால் வாங்கத் தேய்.

இதன் பொருள்:
முக்காலைக் கைப்பிடித்து =இரண்டு கால்கள் பற்றாமல் மூன்றாவது காலாகக்
கைத்தடி ஊன்றி
மூவிரண்டு போகையிலே =(மூவிரண்டு=ஆறு) வழிநடக்கும் போது
அக்காலை
ஐந்து தலை நாகம்=நெருஞ்சி முள்
அழுந்தக் கடித்தால்=காலில் தைத்தால்
பதூரதன் புத்திரன்=தசரதனின் மகன் ராமன்
மித்திரன்=நண்பன் (ராமனின் நண்பன் சுக்ரீவன்)
சத்துருவின்=எதிரியின்(சுக்ரீவனின் எதிரி வாலி)
பத்தினியின்=மனைவியின்(வாலியின் மனைவி தாரை)
கால் வாங்கத் தேய்=(தாரை என்ற வார்த்தையில் காலைஎடுத்தால்,தரை)
தரையில் தேய்.
அதாவது காலில் நெருஞ்சி முள் குத்தினால் ,காலைத் தரையில் தேய்க்க வேண்டும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment