உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன்மொழிகள் (2)

0

Posted on : Sunday, February 14, 2010 | By : ஜெயராஜன் | In :

மனிதர்களை நீ எடை போட்டுக் கொண்டே இருந்தால்
அவர்களை நேசிக்க உனக்கு நேரமே கிடைக்காது.
**********
வயதாவதைக் கண்டு பயப்படாதீர்கள்.
பலருக்கு அந்த வாய்ப்பே கிடைப்பதில்லை.
**********
உணர்ச்சி வேகத்தில் அறிவாளியும் மடையனாகிறான்.
***********
சட்டென்று பதில் உரைப்பவனுக்கு அறிவு மட்டம்.
***********
ஏளனம் என்பது குறுகிய உள்ளத்திலிருந்து வரும் நச்சுப் புகை.
**********
அகங்காரம் வரும் போது அவமானமும் கூடவே வரும்.
*********
திடீரென்று நீ வெற்றி பெற்று விட்டால்,நீ வெற்றி
பெறுவதற்காகவே பிறந்தவன் என்று எண்ணி விடாதே.
********
சோம்பேறித்தனம் தற்கொலைக்கு சமம்.
**********
நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுபவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும்
சரியான பதில் என்ன தெரியுமா? மௌனம் .
***********
கடலில் எவ்வளவு புயல்களைச் சந்தித்தீர்கள் என்பதைப் பற்றி
உலகிற்கு அக்கறையில்லை.
கப்பலைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தீர்களா
என்பதில் தான் அக்கறை.
***********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment