உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

யாரை மாற்றுவது?

0

Posted on : Wednesday, February 24, 2010 | By : ஜெயராஜன் | In :

எனது இளம் வயதில் நான் ஒரு புரட்சியாளனாக இருந்தேன்.அந்த சமயத்தில்,''இறைவனே,இந்த உலகத்தை மாற்றுவதற்கு எனக்கு சக்தியைக் கொடு,''என்பதைத் தவிர வேறு எதையும் நான் பிரார்த்தனை செய்ததில்லை.
ஒரே ஒருவரைக்  கூட மாற்ற முடியாமல் எனது வாழ்க்கையின் பாதி காலம் முடிந்து விட்டதை எனது நடு வயதை எட்டிய சமயத்தில் உணர்ந்தேன்.அதனால் எனது பிரார்த்தனையை மாற்றிக் கொண்டேன்.
''இறைவா,என்னிடம் தொடர்பு கொள்பவர்களை எல்லாம் நான் மாற்றுவதற்கு  எனக்கு அருள் புரி.''
இப்போதோ எனக்கு வயதாகி விட்டது.என் நாட்கள் எண்ணப்படுகின்றன.என்னால் யாரையும் மாற்ற முடியவில்லை.இப்போதெல்லாம்,''இறைவா,என்னை நானே மாற்றி கொள்வதற்கு அருள்வாயாக!''என்றுதான் பிரார்த்தனை செய்கிறேன்.ஆரம்பத்திலிருந்தே நான் இப்படிப் பிரார்த்தனை செய்திருந்தால் என் வாழ்க்கையை வீணடித்திருக்க மாட்டேன்.
நான் மாறும்போது உலகம் மாறுகிறது.
                                            ---------சூபி ஞானி பயாஜித்

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment