உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொன் மொழிகள் (3)

0

Posted on : Wednesday, February 17, 2010 | By : ஜெயராஜன் | In :

உங்களைப் பற்றி நீங்கள் மட்டமாகப் பேசாதீர்கள்.
அதைப் பேசத்தான் நண்பர்கள் இருக்கிறார்களே?
********
தவறான அபிப்பிராயங்கள் பொய்யை விடப் பெரிய எதிரிகள்.
********
பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று
நினைக்கத் தொடங்கினால் அவர்கள் உங்களைப் பற்றி
நினைக்காததைஎல்லாம் நினைப்பதாக நீங்கள்
நினைத்துக் கொள்வீர்கள்.
********
மூடனுடன் விவாதம் செய்வது அறிவுடைமை அல்ல.
அதனால் விவாதத்தின்பின் யார் மூடன் என்பது
விளங்காமல் போய் விடும்.
********
மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாயைத் திறந்தால்
உன் செவியை அடைத்துக்கொள்.
********
நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை.
ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்.
*********
ஒருவரின் அவல நிலையைப் பார்த்து சிரிக்கும் போது
நம் அறியாமையை உறுதிப் படுத்துகிறோம்.
*********
இருளடைந்து கிடக்கிறதே என்று முணுமுணுப்பதை விட
சிறு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மேல்.
********
வீணான எண்ணங்கள் நச்சக் கிருமிகள்.
உள்ளே அனுமதித்து விட்டால் அழிப்பது சிரமம்.
*********
துயரங்களை எதிர் பார்ப்பவன்,
இரு முறை துயரம் அடைகிறான்.
*********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment