உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஆட்டுக்கு இருபது கால்

0

Posted on : Saturday, February 27, 2010 | By : ஜெயராஜன் | In :

''கொம்பிலிருக்கும் குரங்குக்கோர் வாலிரண்டு;
கம்ப மத யானைக்குக் கால்கள் எட்டு-செம்பமலைக்
காட்டில் திரியும் கரடிக்கோர் வாயைந்து
ஆட்டுக்கு இருபது கால்.''
தப்பும் தவறுமாய் இருக்கும் இது ஒரு பாட்டா எனக் கேட்கிறீர்களா? சரியான பதில் தெரிய பதம் பிரித்து குறியீடு போட்டு கீழே உள்ளது போல் எழுத வேண்டும்.
''கொம்பிலிருக்கும் குரங்குக்கு ஓர் வால்;
இரண்டு கம்ப மத யானைக்குக் கால்கள் எட்டு;
செம்பமலைக் காட்டில் திரியும் கரடிக்கோர் வாய்;
ஐந்து ஆட்டுக்கு இருபது கால்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment