உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

புகழ்ச்சி

0

Posted on : Sunday, February 07, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு யூத குரு புதிதாக ஒரு ஊருக்கு வந்தார்.ஊர் மக்கள் கூடி அவருக்கு ஒரு வரவேற்பு விழா நடத்த அனுமதி கேட்டனர்.சம்மதம் தெரிவித்த குரு வரவேற்பு விழாவுக்கு முன்னர் ஒரு அறையில் தனியாகச் சென்று தாளிட்டுக் கொண்டார்.வெளியிளிருந்தவர்களுக்கு அவர் ஏதேதோ பேசுவது கேட்டது.சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவரிடம் விளக்கம் கேட்டனர்.''இன்றைய கூட்டத்தில் என்னை அளவுக்கு மீறி புகழ்வீர்கள்.அது என்னுள் அகந்தையை வளர்க்கும்.கூட்டத்தில் நீங்கள் எப்படியெல்லாம் புகழ் வீர்களோ அதை எனக்கு நானே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டேன்.இப்போது அந்த சொற்கள் எனக்கு மிகவும் பழகி விட்டன.நீங்கள் அவற்றை உபயோகிக்கும் போது என்னுள் எந்த பாதிப்பும் ஏற்படாது.''என்றார் அவர்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment