உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

திருட்டு

1

Posted on : Sunday, February 28, 2010 | By : ஜெயராஜன் | In :

வாரச் சந்தையில் மலிவான விலையில் கழுதை விற்பது முல்லாவின் வழக்கம்.அந்த ஊர்ப் பணக்காரருக்கு முல்லா எப்படி குறைவான விலையில் விற்கிறார் என்பது புரியவில்லை.எனவே அவரிடம் கேட்டார்,''எனக்கோ கழுதை வளர்க்க செலவேதுமில்லை.கழுதைகளைக் கவனிக்க அடிமைகள் இருக்கிறார்கள்.என் விவசாயிகள் கழுதைகளுக்கு உணவைக் கொடுத்து விடுகிறார்கள்.இருந்தும் என்னால் உன் அளவிற்கு என்னால் குறைந்த விலையில் கொடுக்க முடியவில்லையே,''முல்லா சொன்னார்,'நீங்கள் உங்கள் கழுதைகளை வளர்ப்பதற்கான உணவையும் உழைப்பையும் திருடுகிறீர்கள்.நானோ கழுதை களையே திருடி விடுகிறேன்.அவ்வளவுதான்.'

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி: