உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சித்தாந்தம்

0

Posted on : Monday, February 22, 2010 | By : ஜெயராஜன் | In :

மனிதர்கள் இயல்பாலே கொடுமையானவர்கள் அல்லர்.மகிழ்ச்சியிலே இருக்கும் போதோ,ஒரு சித்தாந்தத்தின் பிடியில் சிக்கியிருக்கும் போதோ தான் அவர்கள் கொடூரமானவர்களாக மாறி விடுகிறார்கள்.
ஒரு சித்தாந்தத்திற்கு எதிராக இன்னொரு சித்தாந்தம் கிளம்புகிறது.ஒரு மதத்திற்கு எதிராக இன்னொரு  மதம் போர் முரசு கொட்டுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே அழிந்து போவது மக்கள் தான்.
இயேசுநாதரை சிலுவையில் அறைந்தவர்கள் பிரியமான கணவராகவும்,அன்பான அப்பாக்களாகவும் தான் இருந்திருப்பார்கள்.ஒரு மதத்தை அல்லது ஒரு சித்தாந்தத்தை காப்பாற்றுவதற்காகத்தான் இவர்கள் கொடூரமாக நடந்து கொண்டார்கள்.
தத்தம் மதங்களின் தர்க்க நியாயங்கள் சொல்வதைவிட தங்கள் இதயம் சொல்வதை சமயவாதிகள் பின்பற்றி இருந்தால்,மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை உயிரோடு கொல்லும் கொடூரக் காட்சிகளைப் பார்க்க நேரிட்டிருக்காது.பெண்கள் உடன்கட்டை ஏறி எரிந்து சாம்பலானதையும்,கடவுளின் பெயரால் நடத்தப்பட்ட யுத்தங்களில் அப்பாவி மக்கள் கொலை செயப்பட்டதையும் நாம் பார்த்திருக்க மாட்டோம்.
பரிவு காட்டுவதற்கு எந்த சித்தாந்தமும் தேவையில்லை.
                                                     --------அந்தோணி  டி மெல்லோ.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment