உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிரித்து வாழ்வோம்

0

Posted on : Tuesday, February 02, 2010 | By : ஜெயராஜன் | In :

********
''இந்த எலுமிச்சைக் கலர்ப் புடவையை எப்படி எடுத்த?''
'என் கணவரைப் பிழிஞ்சு தான் .'
********
அப்பா:யாரையும் டீ போட்டுப் பேசக்கூடாது.
மகன்:சரி டா (டி)
********
ஹோட்டலில் சாப்பிட்டவர் பணம் இல்லாதலால் மாவாட்டிக் கொண்டிருந்தார்.அங்கே வந்த முதலாளி அவரைப் பார்த்து விட்டு,''நீங்கள் ஒரு எழுத்தாளரா?''எனக் கேட்டதும் அவருக்கு ஆச்சரியம்.'எப்படி சரியாய்க் கண்டு பிடித்தீர்கள்?'என்று கேட்டார்.
முதலாளி சொன்னார்,''நீங்க தான் அரைச்ச மாவையே அரைச்சுக் கிட்டு இருக்கீங்களே!''
*********
ஒரு மகளிர் அழகு நிலையம் முன் எழுதி வைக்கப் பட்டிருந்த வாசகம்:
இங்கிருந்து வெளியே செல்லும் பெண்களைப் பார்த்து விசில் அடிக்காதீர்கள்.அவர்கள் ஒரு வேளை உங்கள் பாட்டியாக இருக்கலாம்.
***********
''அம்மா தாயே,பிச்சை போடுங்கம்மா.''
'ஒண்ணுமில்லை,பக்கத்து வீட்டுக்குப் போப்பா.'
''பக்கத்து வீட்டுக்காரன் தாம்மா,நான்.''
***********
''சர்வர்,உங்கள் ஹோட்டல் மெது வடை நன்றாக இருக்கிறது.இந்த வடையைப் போட்டவரை பாராட்ட வேண்டும்.அவரை கூப்பிட முடியுமா?''
'அவர் சென்ற ஒரு வாரமாக லீவில் இருக்கிறார்,சார்.'
***********
''நடக்கக் கூடாதது நடந்து போச்சுங்க,''என்று ஒருவர் தன நண்பரிடம் சலித்துக் கொண்டார்.'அப்படி என்ன நடந்து விட்டது?'என்று நண்பர் கேட்க,''நான் ரேசில் பணம் கட்டிய குதிரை,''என்றார் அவர்.
************
''எப்போதும் சந்தோசம் தரும் செயல்களையே செய்து பழக வேண்டும்.உதாரணமாக வேலை செய்கிற இடத்திலேயே பாட்டுப் பாட முயற்சி செய்யுங்கள்.''
'அது முடியாது,டாக்டர்,'
''ஏன்?''
'நான் ஒரு நாதஸ்வர வித்வான்.'
**********
''உங்க மாமியார் கீழே விழுந்தப்போ நீ தூக்கி விடலையாமே?''
'நான் என்ன செய்வது?டாக்டர் தான் கனமான பொருள்களைத் தூக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறாரே!'
*************
ஒரு பாடகர் சொன்னார்,''புன்னகவராளி ராகம் பாடினா ,பாம்பு வரும்.நீலாம்பரி பாடினா தூக்கம் வரும்.மோகனம் பாடினா மகிழ்ச்சி வரும்.....''
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவன் கேட்டான்,''எந்த ராகம் பாடும் போது கல் வரும்?''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment