உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சந்தேகம்

0

Posted on : Monday, February 15, 2010 | By : ஜெயராஜன் | In :

சந்தேகம் லாபம் தருவதாக இருப்பதால் உங்களுக்குள் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.கணக்குப் பார்த்து காரியம் செய்யும் ஆற்றல் அதனால் கிடைக்கிறது.அதிகப் பாதுகாப்பு கிடைக்கிறது.உங்களை எளிதில் யாரும் ஏமாற்றி விட முடியாது.ஆனால் சந்தேகம் கவலையைக் கொண்டு வந்து விடுகிறது.அடி மனதில் நிம்மதியின்மை இருப்பதால் தான் அந்தக் கவலை.இதை செய்வதா அதை செய்வதா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுவதே சந்தேகம்.சந்தேகம் இருந்தால் மனப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது.மனதில் ஒரு சிறுபான்மை அம்சம் இருக்கவே செய்யும்.அது சிறிதாக இருக்காது.அதற்கு எதிராக முடிவெடுத்தால் நீ எடுத்த முடிவு தவறு என்று சொல்வதற்கான சந்தர்ப்பத்தை அது எதிர் பார்த்துக் கொண்டேயிருக்கும்.அந்த சிறுபான்மை,கலகம் செய்யக் காத்திருப்பது.இடைவிடாமல் அது உங்களுக்குள் குழப்பம் செய்து கொண்டே இருக்கும்.
சந்தேகம் ஒரு மன நோய்.அது மேலும் மேலும் கூடிக் கொண்டே போகும்.சந்தேகம் உள்ளவர் தந்திரசாலியாக இருப்பார்.அவரை ஏமாற்ற முடியாது.புத்திசாலியாக இருப்பார்.என்றாலும் அவர் மன நோயாளிதான்.
அவரை ஏமாற்ற முடியாது என்பது ஒரு லாபம் தான்.ஆனால்அதற்கு அவர் கொடுக்கும் விலை மிகவும் அதிகம்.அவருக்கு நிம்மதியில்லை.எப்போதும் ஒரு ஊசலாட்டம்.அவர் பிளவு பட்ட மனிதர்.அதனால் உள் முரண்பாடு இருந்து கொண்டே இருக்கும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment