உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

புலவரின் புதிர்

0

Posted on : Thursday, February 11, 2010 | By : ஜெயராஜன் | In :

பல தூண்கள் உள்ள ஒரு மண்டபத்தில் ஒரு புலவர் அமர்ந்திருந்தார்.அப்போது ஒருவன் ஓடி வந்து,''இந்தப் பக்கம் ஒருவன் ஓடி வந்தானே?அவன் எங்கே?''என்று புலவரைக் கேட்டான். திருடன் மறைந்திருக்கும் இடம் புலவருக்குத் தெரியும்.அவனைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை.அதே சமயத்தில் பொய் சொல்லவும் விரும்பவில்லை.அதனால் நேரிடையாகக் கூறாமல் ஒரு புதிர் மூலம் பதில் அளித்தார்.
முருகனது கடைசி முகம் எது? (ஆறு)
வீட்டைத் தாங்குவது எது? (தூண்)
வேதத்தின் வேறு பெயர் என்ன? (மறை)
வேடன் வைத்திருப்பது என்ன? (வில்)
விடை:ஆறாவது தூண் மறைவில்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment