உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

மனதின் தந்திரம்

0

Posted on : Wednesday, February 17, 2010 | By : ஜெயராஜன் | In :

அறிவுக் கனியை உண்ணக் கூடாது என்பது ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடப்பட்ட உத்தரவு.ஆனால் அதை சுவைக்க அவர்களுக்கு ஆசை.அது இயல்பு தானே.எது கூடாது என்று தடுக்கப் பட்டாலும் அதன் மீது ஆசை எழுவது இயல்பு.மனம் அப்படித்தான் செயல் படும்.மனதிடம் இன்னொரு தந்திரமும் உண்டு.அது உங்களைத் தூண்டிவிடும்.பொறுப்பை யார் தலையிலாவது சுமத்தத் தான் அது தந்திரம் செய்யும்.
எப்போது எது தடுக்கப் பட்டாலும் அதன் மீது மனதிற்கு ஆர்வம் வந்து விடும்.அது ஒரு அழைப்பு போல.
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இயல்பாகவே கனியை சுவைக்க ஆசை ஏற்பட்டு விட்டது.அங்கே வேறு யாரும் இல்லை.ஆனால் கதை என்ன சொல்கிறது?சாத்தான் தூண்டி விட்டான் என்கிறது.இது தான் யார் மீதாவது பொறுப்பைத் தள்ளி விடும் மனதின் தந்திரம்.
சாத்தான் ஒரு பலிகடா தான்.அந்த சாத்தான் மனதின் கண்டுபிடிப்பு.சாத்தான் தூண்டினான்;மயக்கி ஏமாற்றி விட்டான் என்று சொல்லி விட்டால்,நீங்கள் பாவியல்ல என்று தப்பி விடலாமல்லவா?ஆனால் கவர்ச்சி ஏற்பட்டதென்னவோ,தடுக்கப் பட்டதனால்தான்.மனம் செய்த தந்திரம் கதையை மாற்றி விட்டது.ஆனால் கதை அழகானது.
மனமே சாத்தான்.தந்திரத்திற்கான பழைய குறியீடு தான் பாம்பு.மனமே பாம்பு.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment