உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

காலில் விழுந்த நீர்

0

Posted on : Saturday, February 13, 2010 | By : ஜெயராஜன் | In :

கம்பரும்,சோழ மன்னரும் மாலை நேரத்தில் சோலையில் உலாவிக் கொண்டிருந்தனர்.அருகே ஓடிக் கொண்டிருந்த ஆற்று நீர் காலில் படும்படி இருவரும் நடந்து கொண்டிருந்தனர்.நீர் வேட்கை கொண்ட கம்பர்,அந்த ஆற்றின் தெள்ளிய நீரைக் கையில் அள்ளிக் குடித்தார்.இதைக் கண்ட மன்னர்,கம்பரை மட்டம் தட்ட எண்ணி,''கம்பரே,என் காலில் விழுந்த நீரைத் தானே நீர் குடித்தீர்?''என்று கிண்டலாகக் கேட்டார்.அதற்கு கம்பர்,'நீரே காலில் விழுந்தால் நான் என்ன செய்வது?'என்று பதிலுரைத்தார்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment