உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ராசி

0

Posted on : Sunday, February 28, 2010 | By : ஜெயராஜன் | In :

இந்திய மகாராஜா ஒருவருக்கு ஒரு பெரிய வைரக் கம்பெனி ஒரு பெரிய வைரக்கல்லை விற்க முன் வந்தது.மகாராஜாவுக்கு அது பிடித்து விட்டதால் எவ்வளவு விலையானாலும் வாங்க சம்மதித்து விட்டார்.மகாராஜா மேலும் மகிழ்ச்சி அடைவார் என்று எண்ணி விற்க வந்தவர் சொன்னார்,''இது சாதாரணமான கல் அல்ல.இது பதினாறாம் லூயி மன்னர் அணிந்திருந்ததாக்கும்.,''உடனே மகாராஜா வைரக்கல் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.காரணம் கேட்ட போது காரியதரிசி விளக்கினார்,''பதினாறாம் லூயி பிரெஞ்சுப் புரட்சியின் போது சிரச் சேதம் செய்யப்பட்டு இறந்தவர்.அதனால் இது ராசியில்லாத கல்.''
தேவைக்கு அதிகம் பேசினாலும் சிக்கல் தான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment