உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நரம்புக் கோளாறு

0

Posted on : Tuesday, February 16, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு சின்னக் குழந்தை கடற்கரை மணலில் விளையாட ஆசைப்பட்டது.''வேண்டாம்,மணல் ஒரே ஈரம்.ஆடைகள் அழுக்காகிவிடும்.''என்றாள் தாய்.சரியென்று சொல்லி குழந்தை தண்ணீருக்கு அருகில் சென்றது. தாய்,''ஐயோ,வேண்டாம்.நீ உள்ளே விழுந்து விடுவாய்.''என்று கத்தினாள்.சரி,ஓடி விளையாடிக் குதிக்கலாம் என்று ஆரம்பித்தது குழந்தை.''வேண்டாம்,கூட்டத்தில் காணாமல் போய் விடுவாய்,''என்று தடுத்தாள் தாய்.அப்போது ஐஸ் க்ரீம் விற்பவன் வந்தான்.குழந்தை ஐஸ் க்ரீம் கேட்டது.''வேண்டாம்,தொண்டை கெட்டுவிடும்.உடம்புக்கும் கெடுதல் என்று மறுத்தாள் தாய்.குழந்தை அழுதாள்.தாய் அருகில் இருந்தவரிடம்,''இப்படி ஒரு நரம்புக் கோளாறு உள்ள குழந்தையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?''என்று கேட்டாள்
யாருக்கு நரம்புக் கோளாறு?.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment