உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

விழிப்புடன் முன்னேறு

0

Posted on : Wednesday, July 20, 2011 | By : ஜெயராஜன் | In :

இன்றைய நாள் உனக்கு புதிய பிறப்பு:சிறந்தது:சாதனையைத் துவக்கு;கடந்த  காலத் தவறுகளை இருகரம் குவித்து வழி அனுப்பிவிடு.புதியவனாய்,தூய்மையாளனாய் சாதனையை இப்பொழுதே துவக்கு.கடந்தகாலத் தவறுகளினால் நல்ல பாடங்களைக் கற்றுவிட்டாய். ஆகையால் இப்போது புதிய தெம்புடன்,நம்பிக்கையுடன்,புதிய உறுதியுடன்,விழிப்புடன் முன்னேறு.
**********
வழி மாறாதே,அஞ்சாதே,தயங்காதே,கலங்காதே,சந்தேகம் கொள்ளாதே , வாழ்வை வீணாக்காதே.உன்னுள் அளவற்ற சக்தி குவிந்துள்ளது.நீ சக்தியின் பெரும் அணைத்தேக்கம்.வழியில் எதிர்ப்படும் ஒவ்வொரு தடங்கலும் வெற்றியின் படிகள்.அவை உன் எண்ணத்தின் ஆற்றலை வளர்க்கின்றன.குறை நிறைகளையும் பாவபுண்ணியங்களையும்  நினைவூட்டுகின்றன.
**********
                                                                        --சிவானந்தர்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment