உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிரிப்புக்கா பஞ்சம்?

1

Posted on : Monday, July 04, 2011 | By : ஜெயராஜன் | In :

''ஏன் தம்பி,உன் மனைவிக்கு  அவளுடைய அத்தை அதிகச் சொத்தினை எழுதி வைத்திருப்பதால் தான் நீ அவளை கல்யாணம் செய்து கொண்டாயாமே?''
'இது அபாண்டமான குற்றச்சாட்டு.என் மனைவியுடைய அத்தை என்றில்லை,யார் அவள் பேரில் சொத்து எழுதி வைத்திருந்தாலும் அவளைக் கல்யாணம் செய்திருப்பேன்.'
**********
''ஒரு புதிருக்கு பதில் சொல்லு பார்ப்போம்!நான்கு கால் இருக்கும்.அதன் மீது ஈக்கள் குடியிருக்கும்.அது என்ன?''
'நாயா?'
''இல்லை.உங்கள் வீட்டு டைனிங் டேபிள்.''
**********
ஒரு கிராமத்து ஆள் நகரத்துக்கு வந்தார்.ஒரு வீட்டில்,'கதவைத் தட்டாதீர்கள்.அழைப்பு மணியை அடிக்கவும்'என்று எழுதிய பலகை இருந்தது.அதைப் பார்த்த அவர் அழைப்பு மணியை அடித்தார்.வீட்டினுள்ளிருந்து ஒருவர் வந்து கதவைத் திறந்து,''உங்களுக்கு என்ன வேண்டும்?''என்று கேட்டார்.கிராமத்து ஆளும்,'எனக்கு ஒன்றும் வேண்டாம்.இதில் அழைப்புமணியை அடிக்கச் சொல்லி இருந்ததால் அடித்தேன்.'என்றார் வீட்டுக்காரருக்கோ கோபம் வந்து விட்டது.அவர் ''எனக்குத் தெரியும்.இந்தக் குரங்குகளெல்லாம் மரத்துக்கு மரம் தாவித் திரியுமே அந்த கிராமத்தான்தானே நீ ?''என்றார்.கிராமத்து ஆளோ கொஞ்சம் கூடப் பதட்டமில்லாது சொன்னார்,'அது பரவாயில்லை,இங்கே நகரத்திலே ஒரு அழைப்பு மணி அடித்தாலே ஒரு குரங்கு வந்து நிற்கிறதே!'
**********
''உங்கள் பாடலுக்கு ஏன் தொடர்ந்து இடைவிடாது கைதட்டிக் கொண்டிருக்கிறார்கள்?''
'கைதட்டிக் கொண்டே இருந்தால் நான் அப்புறம் பாட மாட்டேன் என்று சொன்னேன்.'
**********
''என்ன இது நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு வணக்கம் சொல்கிறீர்கள்.அவர் திரும்ப வணக்கம் சொல்லாமல் போகிறாரே!''
'அதை ஏன் கேட்கிறீர்கள்?நான் எதைக் கொடுத்தாலும் அவர் திரும்பக் கொடுப்பதில்லை.'
**********
''இந்த நாயோடு பெரிய தொந்தரவாய் இருக்கு.உடனே அதைக் கொண்டுபோய் பக்கத்திலுள்ள காட்டில் விட்டு வாருங்கள்.''என்றாள் மனைவி.உடனே கணவனும் நாயைத் தூக்கிக் கொண்டு காட்டுக்குப் போனான்.நீண்ட நேரம் கழித்து வந்த கணவனை மனைவி தாமதத்திற்குக் காரணம் கேட்க,கணவன் சொன்னான்,''காட்டில் நாயை விட்டுவிட்டு வரும்போது எனக்கு வழி தெரியவில்லை.அப்புறம் நம் நாய்தான் எனக்கு வழி காட்டிற்று,''அவன் பின்னால் நாய் நின்று கொண்டிருந்தது.
**********
''இன்று பார்பர் ஷாப்பில் உனக்கு பார்பர் முடி வெட்டிக் கொண்டிருக்கும்போது மூன்று இடத்தில் காயம் ஏற்பட்டு  இரத்தம் வழிந்தது.அந்த இடத்திலெல்லாம் மட்டமான பிளாஸ்திரியை அந்த ஆள் ஓட்டினான்.இருந்தும் அவனுக்கு கட்டணம் போக இருபது ரூபாய் டிப்ஸ் வேறு கொடுத்தாயே,அது ஏன்?''
'ஒரே ஆள் பார்பர் வேலையையும்.கசாப்புக்கடைக்காரன் வேலையையும்,மருத்துவர் வேலையையும் பார்த்தானே.அதற்காகவாவது  இந்த டிப்ஸ் கொடுக்கத்தானே வேண்டும்?''
**********
மனைவி: இந்தாங்க முடி உதிராமல் இருக்க ஒரு  தைலம்.
கணவன்:எனக்கு ஒன்றும் முடி உதிரவில்லையே!
மனைவி:அப்போ இதை உங்கள் டைப்பிஸ்ட் அம்மையாருக்குக்
கொடுங்கள்.துணி துவைக்கும்போது பார்த்தால் உங்கள் சட்டையெல்லாம் ஒரே முடி.'
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

super.. rasiththen.. siriththen.. vaalththukkal

Post a Comment