உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சந்தோசம்

0

Posted on : Wednesday, July 13, 2011 | By : ஜெயராஜன் | In :

சந்தோசத்தில் மூன்று வகை உண்டு.
களிப்பு: இது உடலைப் பொறுத்தது.நாம் விரும்பிச் சாப்பிடும்  உணவு.உடலால் அனுபவிக்கும் சுகங்களெல்லாம் களிப்பு.இவை திகட்டி விடும்.இரண்டாவது இட்லி சாப்பிடும்போது உள்ள சந்தோசம் பத்தாவது இட்லி சாப்பிடும்போது  இருக்காது.
மகிழ்வு: இது மனத்தால் ஏற்படுவது.நல்ல சங்கீதத்தை அனுபவிப்பது:நல்ல இலக்கியத்தைப் படிப்பது:நல்ல விசயங்களை ரசிப்பது:நல்ல பேச்சைக் கேட்பது. இவையெல்லாம் மகிழ்ச்சி.அவ்வப்போது ஏற்படும்.
ஆனந்தம்:இது மனதுக்குள் ஊற்றுப்போல் ஊறி வருவது.பிறருக்கு நன்மை செய்வது ,எல்லோருக்கும் சந்தோசமான காரியங்களைச் செய்வது எல்லாம் ஆனந்தம் தருபவை.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment