உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வீடு

1

Posted on : Saturday, July 30, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு தமிழ் அறிஞர் உடல் நிலை பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார்.அவரிடம் டாக்டர் ,''நீங்கள் இனி வீட்டுக்குப் போகலாம்,''என்று சொன்னார்.உடனே தமிழ் அறிஞர் சிரித்துக்கொண்டே,'எந்த வீடு?''என்று கேட்டார்.டாக்டருக்கும் தமிழில் புலமை இருந்ததால்,''அந்த வீட்டுக்கு (மோட்சம் )போக இன்னும் நாளிருக்கிறது இப்போது உங்கள் வீட்டுக்குப் போங்கள்.''என்றார்.
**********
புலவர் ஒருவர் தன மாணவனை சோதிக்க எண்ணி சில்லறைக் காசுகள் கொஞ்சம் கொடுத்து,மேகம்,பசு, மணி மூன்றையும் வாங்கிவரப் பணித்தார். அந்த கெட்டிக்கார மாணவனும் புலவர் கேட்டதை வாங்கி வந்து கொடுக்க மகிழ்வுடன் அவனைத் தட்டிக் கொடுத்தார்.மாணவன் என்ன வாங்கி வந்தான்?காராமணிப் பயறு.என்ன புரியவில்லையா?
காராமணி=கார்+ஆ+மணி
கார்=மேகம்:  ஆ=பசு : 
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

சிந்தனைத் தகவல்கள் அருமை . பகிர்ந்தமைக்கு நன்றி

Post a Comment