உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அஹிம்சை

0

Posted on : Saturday, July 02, 2011 | By : ஜெயராஜன் | In :

வாழ்வில் என்ன வேண்டுமோ அதை அடைய மிரட்டல் அல்லது பலாத்காரத்தைக் காட்டிலும் அஹிம்சை முறை விரைவாகவும் எளிதாகவும் வெற்றியைத் தேடித்தரும்.யாரேனும் மிரட்டலிலோ வன்முறையிலோ ஈடுபட்டால் அவர்கள் கிலி அடைந்திருக்கிறார்கள்,அல்லது தங்களைத்  தாங்களே மட்டமாக எடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஊகிக்கலாம்.வன்முறை பற்றிய எண்ணமே அவர்களது பலவீனமான மனநிலையைக் காட்டிக் கொடுப்பதாக அமையும்.மிரட்டல் அல்லது வன்முறையில் ஈடுபடுவதன் மூலம் தனது அடிமனதிலுள்ள தாழ்வு உணர்வுகளை ஒருவன் வெளிப்படுத்துகிறான்.மற்றவர்கள் உள்ளபடி மிரண்டு போனால் உடனே அல்லது சிறிது காலம் கழித்து விரட்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள்.மிரட்டலுக்கு பயப்படாதவர்கள் சீற்றமடைந்து பதிலுக்கு தாக்குவார்கள்.எப்படியும் வன்முறை மூலம் வெற்றி கிடைத்த மாதிரி தோன்றினாலும் அது தற்காலிகமான வெற்றியாகத்தான் இருக்கும்.ஏனெனில் பதிலடி கொடுக்கக் காத்திருக்கும் ஒரு எதிரி உருவாகிறான்.இதற்கிடையில்,எப்படியும் பதிலடி கிடைக்கும் என்ற உள்ளுணர்வு காரணமாக மிரட்டியவன் பயந்து கொண்டே இருக்க வேண்டும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment