உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வளர்ச்சி

0

Posted on : Tuesday, July 19, 2011 | By : ஜெயராஜன் | In :

உமர் கயாமின் படுக்கையிலே ஷயீரா படுத்திருந்தாள்.ஓவியங்கள் வரையப்  பெற்ற கிண்ணத்தில் மதுவை ஊற்றினான் உமர் கயாம்.நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட நீல நிறத்து உடையில் இருந்தாள் ஷயீரா.அந்தக் காட்சி நீல வானத்து நட்சத்திரங்களிடையே நிலவு பவனி வருவதுபோல இருந்தது. கையில் கோப்பையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் உமர். சிறிது நேரத்தில் கோப்பை காலியாயிற்று.மீண்டும்  ஊற்றிக் கொண்டான்.அரைகுறை போதையோடு ஷயீராவின் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான் உமர். அவன் கண்களில் கசப்புணர்ச்சி தோன்றிற்று.மடமடவென மதுவைக் குடித்து  விட்டுச்சொன்னான்,''சீ!....என்ன முட்டாள்தனம்!மதுவைவிட பெண்களின் இதழ் சுவையானது என்று பாடிவிட்டேனே!''ஷயீரா சிரித்துக்கொண்டே சொன்னாள்,
''உங்கள் அபிப்பிராயத்தை இனி மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.ஏனென்றால் உங்களுக்கு வயதாகி விட்டது.''
                                                          --கண்ணதாசன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment