உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

காணவில்லை

0

Posted on : Wednesday, July 20, 2011 | By : ஜெயராஜன் | In :

கணவனும் மனைவியும் திருவிழாவுக்குப் போயிருந்தார்கள்.கூட்ட நெரிசலில் மனைவி காணாமல் போய்விட்டாள்.கணவன் காவல் நிலையத்தில் புகார் செய்தான்.செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தான். ஆனால் மனைவி கிடைக்கவில்லை.அருகில் இருந்த ராமர் கோவிலுக்கு சென்று மனம் உருக வேண்டினான்,''காணாமல் போன என் மனைவி கிடைக்க அருள் புரியுங்கள்.''        ''இதே சாலை வழியாகப் போனால்,அனுமார் கோவில் வரும்.அங்கு போய்  வேண்டிக்கொள்.என் மனைவி காணாமல் போனபோது தேடிக் கண்டு பிடித்தது  அவர்தான்,''ராமர் தான் பேசினார்.
**********
மனைவி: எப்படி இவ்வளவு சீக்கிரம் இன்று வீட்டுக்கு வரமுடிந்தது?''
கணவன்:முதலாளிக்கு என் மேல் ஏகக் கோபம் .எந்த நரகத்துக்காவது தொலைந்து போஎன்று கத்தினார்.நான் நேராக வீட்டுக்கு வந்துவிட்டேன்.''
**********
பார்லிமெண்டில்  எதிர்க்கட்சித் தலைவர் ஏதோ கூறியபோது சர்ச்சில் அதை மறுப்பதுபோலத் தலையை அசைத்தார்.''எனது மதிப்புக்குரிய நண்பர் தலை அசைப்பதைக் காண்கிறேன்.ஆனால் என் சொந்தக் கருத்தைத்தான் சொல்கிறேன்.''என்றார் எதிர்க்கட்சித் தலைவர்.''நானும் என் சொந்தத் தலையைத்தான் அசைக்கிறேன்.''என்றார் சர்ச்சில்.
**********
                                                                 --குஷ்வந்த்சிங் ஜோக்ஸ்

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment