உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பேச்சு

0

Posted on : Saturday, July 23, 2011 | By : ஜெயராஜன் | In :

பேச வேண்டும் என்ற உந்துதலினால் பேசக்கூடாது.
எதையும் யோசியாமல் பேசக்கூடாது.
பேச்சு எப்போதும் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
தேவையானவைகளையும் பயனுள்ளவற்றையும் மட்டுமே பேச வேண்டும்.
வாக்குவாதம்,சர்ச்சை,சூடான சொற்போர் இவை தவிர்க்கப்பட வேண்டும்.
நாம் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.மற்றவர்கள் சொல்வது தவறு என்று வற்புறுத்தக் கூடாது.
குரலும்,பேசும் முறையும்,அமைதியாக வற்புறுத்தல் ஏதும் இன்றி இருக்க வேண்டும்.
மற்றவர்கள் சூடாக விவாதம் செய்தால் அதை சட்டை செய்யாது நாம் அமைதியைக் கடைப்பிடித்து பேச்சு சுமுகமாகப் போவதற்கு உதவியாக இருக்கக் கூடியவைகளை மட்டும் பேச வேண்டும்.
பிறரைப் பற்றிய வம்பளப்பு,கடுமையான விமரிசனங்கள்,இவற்றில் கலந்து கொள்ளக் கூடாது.ஏனெனில் இவற்றால் எந்தவித நற்பயனும் விளையாது.அவை நம் உணர்வை மேலிருந்து கீழே தாழ்த்தவே உதவுபவை.
ஆகவே எவரையும் புண்படுத்தும் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
                                                                  --ஸ்ரீ அரவிந்தர்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment