உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொதுத்தொண்டு

0

Posted on : Thursday, July 07, 2011 | By : ஜெயராஜன் | In :

புத்தரிடம் சீடராயிருந்த சிலர் பொதுத் தொண்டு செய்வதற்காகப் புறப்பட்டனர். அப்போது புத்தர் அவர்கள் அதற்கு ஏற்றவர்கள் தானா  என்பதை சோதிக்க விரும்பினார்.அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்.
புத்தர்: நீங்கள் மக்களிடம் செல்லும்போது அவர்கள் உங்களை வரவேற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
சீடர்கள்:வரவேற்கவில்லைஎன்றாலும் எங்களை வெறுக்கவில்லையே என்று எண்ணி எங்கள் பணியினைத் தொடருவோம்.
புத்தர்:வெறுத்தால்....?
சீடர்கள்.வெறுத்தாலும் அடிக்கவில்லையே என்று மகிழ்வோம்.
புத்தர்:அவர்கள் உங்களை அடித்தால்....?
சீடர்கள்:அடித்தாலும் கொல்ல நினைக்கவில்லை அல்லவா என்று நினைப்போம்.
புத்தர்:கொன்றால்....?
சீடர்கள்: கொன்றால் விடுதலைதானே?அதனால் மகிழ்ச்சிதானே!
புத்தர்:நீங்கள் பொதுத் தொண்டுக்குப் போகலாம்.
இதுதான் பொதுத் தொண்டுக்கு இலக்கணம்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment