உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

வக்கீல் வாதம்

0

Posted on : Friday, July 08, 2011 | By : ஜெயராஜன் | In :


ஒரு விவசாயியின் தோட்டத்தில் ஒருவன் அனுமதியில்லாமல் நுழைந்து அவன் வளர்த்து வந்த காடைகளை சுட்டான் என்று வழக்கு போடப்பட்டது.எதிர் தரப்பு வக்கீல் விவசாயியைக்  கேள்வி மேல் கேள்வி கேட்டு அவனைக் குழப்ப முயன்றார்.
வக்கீல்:இவர்தான் உன் காடைகளை சுட்டார் என்று சத்தியம் செய்ய முடியுமா?
விவசாயி:நான் அவர்தான் சுட்டார் என்று கூறவில்லை.அவர் சுட்டிருக்கக் கூடும்  என்று சந்தேகப்படுகிறேன்.
வக்கீல்:சரி,ஏன் அப்படி அவர்மேல் சந்தேகப்பட்டாய்?
விவசாயி:நான் அவரை,கையில் துப்பாக்கியோடு இருப்பதைப் பார்த்தேன்.அடுத்து என் நிலத்தில் துப்பாக்கிசப்தம் கேட்டேன்.காடைகள் இறந்து விழுவதைப் பார்த்தேன்.என்னுடைய இறந்த காடைகள் அவர் கையில் இருப்பதைப் பார்த்தேன்.அவ்வளவுதான்.ஆனால் வக்கீல் அவர்களே!என் காடைகள்,தானே தற்கொலை செய்து கொண்டன என்று நீங்கள் கூற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment