உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

காலக்கோளாறு

0

Posted on : Wednesday, July 13, 2011 | By : ஜெயராஜன் | In :

கணவன் சாப்பிட உட்கார்ந்தான்.மனைவி பரிமாறினாள்.கணவன்,''சீ!இது என்ன சாப்பாடா?என் அம்மா சமைத்து சாப்பிட வேண்டும்.''என்றான்.
கணவனுக்கு மனைவி பழங்கள் கொடுத்தாள்.கணவன்,''சீ!இது என்ன பழமா?என் அம்மா கையால் பழங்களை  வாங்கி சாப்பிட வேண்டும்.''என்றான்.
மனைவி தன மடியில் கணவனின் தலையை வைத்து தூங்க வைத்தாள்.கணவன்,''சீ!நீ காட்டுவது பாசமா?பாசம் என்பதை என் அம்மாவிடம்தான் பார்க்க வேண்டும்!''என்றான்.
மனைவி,''என்னைக் கட்டிக்கொண்டு உங்கள் அம்மாவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை விட உங்க அம்மாவையே கட்டிக் கொண்டிருக்கலாமே!'' 
என்றாள்.கணவன் சொன்னான்,''என்ன செய்வது?எனக்கு முன்னால் என் அப்பா கட்டிக் கொண்டு விட்டாரே!''
                                                                              --கண்ணதாசன்,

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment