உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

உயரம்

0

Posted on : Monday, July 04, 2011 | By : ஜெயராஜன் | In :

அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர் ராக்பெல்லர்.அவர் தனது வயதான  காலத்திலும் கூட ஓய்வின்றி கடுமையாக உழைத்து வந்தார்.வியாபார நிமித்தம் பல நாடுகளுக்கும் பறந்து கொண்டே இருந்தார்.ஒரு நாள் விமானப் பயணத்தின்போது அருகில் அமர்ந்திருந்த ஒரு வாலிபன் கேட்டான்,''அய்யா, நீங்களோ உலகிலேயே பெரிய பணக்காரர்.உங்களுக்கும் வயதாகிவிட்டது.இன்னும் எதற்காக நீங்கள் உழைக்க வேண்டும்?''அப்போது  ராக்பெல்லர்,''இப்போது நாம் செல்லும் விமானம் அதிக பட்ச உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது அல்லவா?இதற்கு மேல் உயரப் போக முடியாது.இதில் திருப்தி அடைந்து விமானம் ஓடுவதை நிறுத்தினால் என்ன ஆகும்?''என்று கேட்டார்.விபத்து உண்டாகும் என வாலிபன் பதில் சொன்னான்.உடனே ராக்பெல்லர்,''நம் வாழ்க்கையும் அத்தகையதே.மேலே வந்து விட்டோம் என்று ஓய்வு எடுக்கப்போய் விட்டால் தொழில் நசிந்துவிடும்.உழைப்பது என்பது வருமானத்துக்கு மட்டுமல்ல.அது என் மன திருப்திக்கு,உடல் ஆரோக்யத்திற்கு.''என்றார்.வாலிபன் இப்போது அவருடைய வெற்றியின் ரகசியத்தை அறிந்து கொண்டான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment