உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கடவுளால் முடியாது

0

Posted on : Thursday, July 28, 2011 | By : ஜெயராஜன் | In :

புலவர்கள் எல்லாம் அக்பரை வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.பல பரிசுகளைப் பெற்றுச் சென்றார்கள்.இறுதியாக பீர்பாலின் முறை வந்தது.பீர்பால் சொன்னார்,''அரசே,தாங்கள் செய்யக் கூடியதை அல்லாவாலும் செய்ய முடியாது,''புலவர்கள் பலரும்,''என்ன இருந்தாலும் பீர்பால்,கடவுளை விடப் பெரியவராக அரசரைக் கூறியது தவறு,''என்றனர்.அரசரும் அதை ஒத்துக்கொண்டு பீர்பாலை அதற்கு விளக்கம் அளிக்கக் கோரினார்.பீர்பால் சொன்னார்,''அரசே!தங்களுக்குக் கோபம் வந்தால் ஒருவரை நாட்டை விட்டு வெளியேற்றலாம்.ஆனால் கடவுளால் அது முடியாது அவர் எங்கே அனுப்புவார்?இந்த அண்டமே அவருக்குரியதுதானே?''பீர்பாலின் சாமர்த்தியமான பதில் அரசரை மகிழ்வித்தது.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment