உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

இன்னொரு முறை

0

Posted on : Sunday, July 24, 2011 | By : ஜெயராஜன் | In :

கிராமவாசி ஒருவன்,சிறிது கூட நாகரீகம் இல்லாது அவ்வூர் ஆலயத்தின் முன் சிறு நீர் கழித்துவிட்டான்.கோபம் கொண்ட கோவில் அதிகாரி அவனை ஊர்த்தலைவர் முன் கொண்டுபோய் நிறுத்தினார்.தலைவர் கேட்டார்,''கோவிலை அவமதித்தாயா?''அவன் சொன்னான்,''அய்யா,நான் வழக்கமாகக் கோவில் வழியாக அடிக்கடி சென்று வருவேன்.அன்று திடீரென அடக்க முடியாது சிறுநீர் வந்ததால் வேறு வழியில்லாது கொவில்முன் இருந்துவிட்டேன்.மற்றபடி கோவிலை அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.''தலைவர்,''என்ன இருந்தாலும் நீ செய்தது தவறான காரியம் உனக்கு ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கிறேன்,''என்றார்.அவனும் மறுபேச்சு பேசாது பையிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து தலைவரிடம் கொடுத்தான்.தலைவர் அதை வாங்கித்தான் பையில் வைத்துக்கொண்டே சொன்னார்,''இப்போது என்னிடம் மீதி கொடுக்க ஐநூறு ரூபாய் இல்லை. அதனால் பரவாயில்லை.நாளைக்கு கோவில் முன்னால் இன்னொரு முறை சிறுநீர் கழித்துவிடு.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment