உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஞானத் தொழிற்சாலை

0

Posted on : Sunday, July 10, 2011 | By : ஜெயராஜன் | In :

ராஜா பர்த்ருஹரி ஒரு நாள் இரவு திடீரென்று விழித்துக் கொண்டு விட்டார்.  பக்கத்தில் மனைவியைக் காணவில்லை.அரண்மனை நந்தவனத்தில்  வந்து பார்த்தார்.அங்கே குதிரைக்காரனோடு அவள் கூடிக் கொண்டிருந்தாள்.மறுநாள்,ராஜா பர்த்ருஹரி சந்நியாசி ஆகி விட்டார்.மனைவியிடம் விடை பெறப்போனார்.மனைவி சொன்னாள்,''எனக்கு மிக்க மகிழ்ச்சி!ஒரு மகாராஜாவை மகா ஞானியாக்கியது நான்தானே!''  ராஜா  பர்த்ருஹரி சொன்னார்,''நீயல்ல,குதிரைக்காரன்,''ராணி அலட்சியமாகப்  பார்த்து விட்டு உள்ளே போவதற்காகத் திரும்பினாள்.பத்ருஹரி சொன்னார்,''நில்!அவனை எப்போது ஞானியாக்கப் போகிறாய்?''
                                                                      --கண்ணதாசன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment