உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பொறுமை

0

Posted on : Tuesday, July 19, 2011 | By : ஜெயராஜன் | In :

இரண்டு கழுதைகள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தன.ஒரு கழுதை நன்றாகக் கொழுத்துஇருந்தது.மற்றது எலும்பும் தோலுமாக காணப்பட்டது.இளைத்த கழுதையைப் பார்த்து வலுத்த கழுதை கேட்டது,''எப்படி இருந்த நீ இப்படி ஆகிவிட்டாயே?''மெலிந்த  கழுதை சொன்னது,''என் முதலாளி கல் நெஞ்சன்.நாள் முழுவதும் வேலை  வாங்குவான்.ஆனால் ஒழுங்காகத் தீனி போட மாட்டான்.அடி உதை வேறு அவ்வப்போது கிடைக்கும்.''பலமான கழுதை,''பின் ஏன் அங்கேயே இருக்கிறாய்?ஓடி வந்து விட வேண்டியதுதானே?'' என்று கேட்டது.உடனே பதில் வந்தது,''என் முதலாளிக்கு ஒரு அழகான பெண் இருக்கிறாள்.அவளையும் அவன் கண்டபடி அடிப்பான்.''வலுத்த கழுதை கேட்டது,''அந்தப் பெண்ணுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?''அதற்கு அந்த மெலிந்த கழுதை சொன்னது,''ஒவ்வொரு முறை என் முதலாளி தன பெண்ணை அடிக்கும்போது ,'உன்னை இந்தக் கழுதைக்குத்தான்  கட்டி வைக்கப்போகிறேன்'என்பான்.அதனால்தான் நானும் பொறுமையாய் காத்துக் கொண்டிருக்கிறேன் .''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment