உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கண்கள் புத்துணர்வு பெற

1

Posted on : Friday, July 01, 2011 | By : ஜெயராஜன் | In :

அலுவலகத்திலிருந்து களைத்துப்போய் வீடு திரும்பினால்,நம் அசதியை மற்றவர்களுக்கு தெரிவிப்பது நம் கண்கள்தான்.கண்கள் புத்துணர்ச்சி பெற சில பயிற்சிகள்;
*விழியை உயர்த்தி மேல் நோக்கிப் பாருங்கள்.பார்த்தவாறே இருபது முறை கண்களை மூடி மூடித் திறங்கள்.அதைப்போல விழியைக் கீழ் நோக்கிப் பார்த்து இருபது முறை மூடித் திறங்கள்/.
*கண்களை மூடிக் கொள்ளுங்கள்.நிதானமாக ஐந்து வரை  எண்ணுங்கள்.கண்களைத் திறந்து கொள்ளுங்கள்.ஐந்து வரை எண்ணுங்கள்.இவ்வாறு இருபது முறை செய்யவும்.
*உள்ளங்கைகளை வைத்து கண்களை மூடி இருட்டாக்கி சில நிமிடங்கள் வைத்திருந்து பிறகு திறக்கவும்.
*கண்விழிகளை  இடது வலதாக இருபது தடவைகள் மெதுவாக சுழற்றவும்.அதுபோல வலது இடதாக இருபது முறை சுழற்றுங்கள்.
*ஒரு மேஜையின் முன் அமர்ந்து,கைகளை மேஜையின் மீது வைத்து முகத்தைக் கவிழ்த்து உள்ளங்கையில் கண்களைப் பதியுமாறு வைத்து கண்களை மூட வேண்டும்.தலையின் பாரம் முழுவதும் கையில் இருக்குமாறு கண்கள் லேசாக அழுந்துமாறு வைத்து ஐந்து நிமிடங்கள் இருக்க வேண்டும்.இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம்.
பயிற்சி முடிந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள்.இப்போது கண்கள் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

பயனுள்ள தகவல்கள்..
வாழ்த்துக்கள்..

Post a Comment