உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

எதிரொலி

0

Posted on : Saturday, July 30, 2011 | By : ஜெயராஜன் | In :

பல் டாக்டர் நோயாளியின் வாயத் திறந்து சோதித்தார்,''அடேயப்பா,எவ்வளவு  பெரிய ஓட்டை!''என்று ஆச்சரியத்துடன் கத்தினார்.அவர் இதுவரை இவ்வளவு பெரிய துவாரத்தை எந்த நோயாளியின் பல்லிலும் பார்த்ததில்லை போலும். நோயாளி வருத்தத்துடன் சொன்னார்,''அதை ஏன் சார் இரண்டு முறை சொல்கிறீர்கள்?''டாக்டர் சொன்னார்,''நான் ஒரு முறைதான் சொன்னேன்.நீங்கள் இரண்டாவது கேட்டது எதிரொலியாய் இருக்கலாம்.''
**********
கதவு தட்டப்பட்டது உடனே வீட்டில் இருந்த வாலிபன் கதவைத் திறந்தான்.வாசலில் நின்று கொண்டிருந்தவரிடம் என்ன வேண்டும் என்று கேட்டான்.''நான் உங்கள் வயலினை சரி செய்ய வந்திருக்கிறேன்.''என்றான் வந்தவன்.வாலிபன் ஆச்சரியத்துடன்,''நான் ஒன்றும் வரச்சொல்லவில்லையே?''என்று கேட்டான்.வந்தவன் சொன்னான்,''உங்கள் அடுத்த வீட்டுக்காரர் தான் உங்கள் வயலினை சரி செய்யச்சொல்லி போன் செய்தார்.''
**********
ஒருவன் தன பெண்ணுடன் ஒரு காட்டுப் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தான்.திடீரென ஒரு கொள்ளைக் கூட்டம் குறுக்கே வந்து காரை நிப்பாட்டியது.நான்கு பேர் துப்பாக்கியுடன் வந்தனர்.பெண் உடனே விலை உயர்ந்த நகைகளை தன வாயில் போட்டுக் கொண்டார்.கொள்ளையர் காரை சோதனையிட்டு விலை உயர்ந்த பொருள் எதுவும் கிடைக்காதலால் கோபமுடன் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.தந்தை பெண்ணிடம் சொன்னார்,''நல்ல வேளை நகைகளை உன் வாயில் போட்டு கொள்ளை போகாமல் காப்பாற்றி விட்டாய்.என்ன,உன் அம்மா வந்திருந்தால் காரையும் காப்பாற்றியிருக்கலாம்.''
**********
''உனக்கு ஒரு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் வைத்திருக்கிறேன்,''என்றார் டாக்டர்.கைதியாய் வந்த அவன் முதலில் கெட்டசெய்தியை சொல்லச்சொன்னான்.டாக்டர் சொன்னார்,''கொலை நடந்த இடத்தல் இருந்த இரத்தமும் உன் இரத்தமும் ஒரே குரூப் என்று சோதனையில் தெரிகிறது.''நொந்து போன அவன் நல்ல செய்தி என்னவென்று கேட்க டாக்டர் சொன்னார்,''இரத்தத்தில் கொழுப்பு குறைந்துள்ளது.''
**********
ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார்,''உங்கள் பெற்றோர் மீது அன்பு வைத்திருக்கிறீர்களா?''அனைத்து மாணவர்களும் ஆம் என்று பதில் சொல்ல ஆசிரியர் மீண்டும் கேட்டார்,''உங்கள் பெற்றோரை வெறுத்தால் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?''மாணவர்கள் அமைதி காத்தனர்.ஒரு மாணவன் மற்றும் கொஞ்சம் யோசனையுடன் மெதுவாய்க் கேட்டான்,''சார்,என் அண்ணனை வெறுத்தால் எவ்வளவு கொடுப்பீர்கள்?''
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment