உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அளவாய் சிரிங்க

0

Posted on : Sunday, July 24, 2011 | By : ஜெயராஜன் | In :

''நீங்க என்ன ,51ரூபாய் கடன் வாங்கிட்டு 15ரூபாய் மட்டும் திரும்பித் தர்ரீங்களே?''
'நீங்கதானே  கொடுத்த  கடனைத்  திருப்பிக்  கொடுக்கச்  சொன்னீங்க!'
**********
''எங்கள் நாட்டில் தான் உயர்ந்த கட்டிடம் உள்ளது.அந்தக் கட்டிடத்தின் உச்சியில் ஒரு  கோழி முட்டையிட்டால் அது  கீழே விழுவதற்குள் சேவலாகிவிடும்.''
.பூ!இவ்வளவுதானா?எங்கள் நாட்டில் உள்ள உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் இருந்து ஒரு குழந்தை கீழே விழுந்தால் தரைக்கு வரும்போது அவன் கிழவனாகி விடுவான்.'
**********
விருந்துக்கு வந்தவர் உணவருந்தும்போது  கேட்டார்,''என்னங்க உங்க நாய் என்னையே உற்றுப் பார்க்கிறது?''வீட்டுக்காரர் சொன்னார்,''வேறொன்றுமில்லை,நீங்கள் சாப்பிடும் தட்டு வழக்கமாக அது சாப்பிடும் தட்டு.அதுதான்.'
**********
அரசு வேளையில் வெற்றிகரமாகத் திகழ மூன்று யோசனைகள்;
*எந்த வேலையும் செய்யக்கூடாது.
*நன்றாக வேலை செய்வதுபோல நடிக்க வேண்டும்.
*அடுத்தவர் வேலைகளில் மூக்கை நுழைக்க வேண்டும்.
**********
டாக்டர்;தினமும் ஒரு வேலை கஞ்சி தான் குடிக்க வேண்டும்.
நோயாளி:எத்தனை நாளைக்கு டாக்டர்?
டாக்டர்:என்னிடம் செய்து கொள்ளும் வைத்தியத்திற்கு பணம் கொடுக்கும் வரை.
நோயாளி:கஞ்சி சாப்பிடுவதற்கும்,பில் தொகை  கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்,டாக்டர்?
டாக்டர்:அப்போதுதானே என் பில் தொகை கொடுக்க உங்களிடம் பணமிருக்கும்?
**********
பத்திரிகை செய்தி:
''வெங்காய வேனும் பெருங்காய வேனும் மோதினதில் வெங்காய வேன் வெங்கையாவுக்கு பெருங்காயம்!''
''சாஸ்திரி வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கும் மேஸ்திரி கீழே விழுந்து ஆஸ்பத்திரியில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டார்.''
**********
கணவன்:ஹலோ,பார்வதியா?
மனைவி:ஆமாங்க நான்தான் பேசுறேன்,என்ன விஷயம்?
கணவன்:நீ சினிமாவுக்குப் போறேன்னு சொன்னியே,போயிட்டேன்னு தெரிஞ்சா வீட்டுக்கு வரலாம்னு பார்த்தேன்.
**********
நோயாளி:டாக்டர்,எனக்கு ஐந்து நாளா சரியான ஜலதோஷம்.உங்களால் குணப்படுத்த் முடியுமா?
டாக்டர்:நான் சொல்றதை செய்யுங்க.நல்லா  சுடு நீரில் குளியுங்க.பின் அறையில் ஏ.சி யைப்போட்டு கொஞ்ச நேரம் இருங்கள்.
நோயாளி:அப்படி செய்தால் என் நோய் குணமாகி விடுமா,டாக்டர்?
டாக்டர்.உனக்கு இப்போது வந்திருக்கும் குளிருக்கு என்னிடம் மருந்து இல்லை.நான் சொன்னபடி செய்தால் உனக்கு நிம்மோனியா காய்ச்சல் வரும்.அதைக் குணப்படுத்த என்னிடம் மருந்து உள்ளது.
**********
வழுக்கைத் தலையர் :தண்ணீர் விட்டுக் கழுவ ஏராளமான முகமும் சீவுவதற்கு கொஞ்சம் முடியும் உடையவர்.
**********
ஒரு விளம்பரம்.
யானை விற்பனைக்கு!ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே!
(பி.கு:ஏற்றி இறக்குக் கூலி இரண்டு லட்சம்.)
**********



தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment