உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சிம்பன்சி

0

Posted on : Sunday, June 13, 2010 | By : ஜெயராஜன் | In :

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு சர்க்கஸ் கம்பெனி மிகச் சிறப்பாகக் காட்சிகளை நடத்தி வந்தது.அதிலும் ஒரு சிம்பன்சி குரங்கின் அட்டகாசமான ஆட்டங்கள் அந்தக் காட்சிக்கே  பெரும் சிறப்பைத் தந்தது.திடீரென அந்தகுரங்கு இறந்து விட்டது.கம்பெனியின்மேனேஜர் முதலாளிக்கு ஒரு தந்தி கொடுத்தார்,''சிம்பன்சி இறந்து விட்டது.அதற்குப் பதிலாக வேறொன்று மாற்றவா அல்லது நீங்கள் வரும் வரை காத்திருக்கவா?''

கச்சேரி 
கச்சேரியில் மிருதங்க வித்துவான் பாடகருடன் ஒத்துழைக்கவில்லை.கச்சேரி  முடிந்தவுடன் பாடகர் சொன்னார்,''அவன் என் பாட்டுக்கு எங்கே வாசித்தான்?அவன் பாட்டுக்கு வாசித்துக் கொண்டே போனான்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment