உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஏற்றுக்கொள்ளாதது

0

Posted on : Friday, June 18, 2010 | By : ஜெயராஜன் | In :

புத்தர் ஒரு முறை தனது சீடர்களுடன் ஒரு ஊருக்குள் சென்றார்.அந்த ஊர் மக்கள் பல்வேறு பலகாரங்களைக் கொண்டு வந்து அவரை எடுத்துக்   கொள்ளச் சொன்னார்கள்.ஆனால் அவரோ,எதையும் எடுத்துக் கொள்ளாமல் புன்முறுவலோடுபோய்விட்டார்.அடுத்த ஊர் வந்தது.அந்த ஊர் மக்களோ புத்தரை வாய்க்கு வந்தபடி திட்டினர்.அப்போதும் அவர் புன்  முறுவலோடு சென்று விட்டார்.ஒரு சீடர் கேட்டார்,'சுவாமி,அவ்வளவு பேர் அவதூறாகப் பேசினார்களே,பதிலுக்கு ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வந்து விட்டீர்களே?உங்களால் எப்படி முடிகிறது?'புத்தபிரான் சொன்னார்,''நாம் முதலில் சென்ற ஊர் மக்கள் கொடுத்த பலகாரம் எதையும் ஏற்கவில்லை  அல்லவா?அதே போலத்தான் இந்த ஊர் மக்கள் கொடுத்ததையும் நான் ஏற்கவில்லை.அங்கே வயிறு ஏற்றுக் கொள்ளாததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.இங்கே மனம் ஏற்றுக் கொள்ளாததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.அவ்வளவுதான்.''

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment