உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பல்வலி

0

Posted on : Wednesday, June 30, 2010 | By : ஜெயராஜன் | In :

தேமுஜின் என்பவனுக்குக் கடுமையான பல்வலி.பல்லைத்  தான் பிடுங்க வேண்டும் என்று மருத்துவர் சொல்லி விட்டார்.உடனே அவன் குதிரை மீதேறி பக்கத்திலுள்ள காட்டிற்குள் சென்றான்.நீண்ட நேரம் பயணம் செய்ததில் பல்வலி கொஞ்சம் குறைந்திருந்தது.ஆனால் இப்போது அவனுக்குக் கடுமையான  பசி.சாப்பிட  ஏதாவது கிடைக்குமா என்று தேடி காட்டினுள் அலைந்தான்.அப்பகுதியின் ஆளுநர் வேட்டைக்காக வந்து அங்கு ஒரு கூடாரத்தில் தங்கியிருந்தார்.அவருடைய ஆட்கள் தேமுஜின்னைக் கண்டு,சந்தேகத்தில் கைது செய்து ஆளுநரிடம் கொண்டு வந்தனர்.தேமுஜின்,தான் ஒரு  தவறும் செய்யாதவன் என்று கூறியும் ஆளுநர் ஏற்றுக் கொள்ள வில்லை.''நீ தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது'' என்று கூறிவிட்டார்.தேமுஜின் சொன்னான்,'உங்களுக்கு விருப்பப்பட்ட தண்டனையைக் கொடுங்கள்.ஆனால் என்னைச் சாப்பிட மட்டும் வைத்து விடாதீர்கள்.ஏதாவது சாப்பிட்டால் நான் இறந்து விடுவேன்.'''சாப்பிடுவதனால் யாராவது இறப்பார்களா?''என்று ஆளுநர் கேட்டார்.தன்னுடைய அழுகிய பல்லைக் காட்டி தேமுஜின் சொன்னான்,'ஒரு மந்திரவாதி எனக்கு இந்தப் பல்லைக் கட்டி விட்டார்.இது அழுகிய பல் போல தோற்றமளித்தாலும் இது இருப்பதால் எனக்குப் பசியே எடுக்காது.அதை மீறி எதையாவது நான் சாப்பிட்டால்,அதுவும் குறிப்பாக,ஆட்டிறைச்சி,இனிப்புகள்,பழ  ரசங்கள்,ஆகியவற்றை சாப்பிட்டால் என் வயிறு வெடித்துவிடும்.'உடனே ஆளுநர்,''இதை நான் உண்மையாவென சோதித்துப் பார்க்க வேண்டும்,''என்று கூறி,கைதிக்கு  சிறப்பான உணவு வகைகளை அளித்திட  ஆணையிட்டார்.வகைவகையான உணவுகள் பரிமாறப்பட்டன.''சாப்பிடு,''என்று கட்டளையிட்டார் ஆளுநர்.சாப்பிடக்கூடாது என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு மிக கவனமாக முதலில் கொஞ்சம் கொஞ்சமாகவும் பின்னர் வேகமாகவும் அனைத்தையும் சாப்பிட்டு முடித்தவுடன் பாசாங்கு செய்து இறந்தவன் போல கீழே விழுந்தான்.''வயிறு வெடித்து இறந்து விட்டான்,''என்று ஆளுநர் நினைத்தார்.உடனே அவர்,தன்னுடைய பல் மருத்துவரை வரவழைத்து,அந்தப் பல்லை பிடுங்கச் செய்தார்.மருத்துவர் ,'இது ஒரு அழுகிய பல்தான்.இதில் வேறு விசேசம் ஏதும் இல்லை.'என்றார்.ஆளுநரோ தன ஏமாற்றத்தை வெளிக்காட்டாது,,''அதை சுத்தம் செய்து வையுங்கள் எதற்கும் உபயோகப்படும்,''என்று சொல்லிவிட்டு வீரர்களைப் பார்த்து,''இவனை மலைச்சரிவில்  உருட்டி விடுங்கள்.''என்றார்.வீர்கள் அவனைத்தூக்கி எரியும் தருணத்தில் அவன் திமிறிக் குதித்து தன குதிரையின் மீதேறிவிரைந்து தப்பித்தான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment