உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

நம்பவில்லை

0

Posted on : Monday, June 21, 2010 | By : ஜெயராஜன் | In :

அரசியல்வாதிகள் பயணம் செய்த ஒரு பேருந்து ஒரு மரத்தில் மோதி பின் ஒரு விவசாயியின் வயலுக்குள் கவிழ்ந்தது.அந்த நிலத்துக்கு சொந்தக்காரரான விவசாயி என்ன நடந்தது என்று பார்க்கப் போனார்.ஒரு பெரிய குழியைத் தோண்டி அனைவரையும் புதைத்துவிட்டு வயலுக்குள் சற்றுத் தள்ளியிருந்த தன வீட்டிற்குச்  சென்றார்.சிறிது நேரம் கழித்து போலீஸ்காரர்கள் வந்தார்கள்.கவிழ்ந்த பேருந்து மட்டும் கிடந்தது.பயணிகள் யாரையும் காணவில்லை.அவர்கள் விவசாயி வீட்டுக் கதவைத்தட்டி விசாரித்தனர்.பயணிகளான அரசியல்வாதிகள் அனைவரையும் புதைத்துவிட்டதாக விவசாயி அவர்களிடம் சொன்னார்.எல்லோருமா இறந்து விட்டார்கள் என போலீஸ் அதிகாரி கேட்டார்.''நான் வரிசையாக ஒவ்வொருவராய் புதைத்து வந்தேன்.ஒரு சிலர் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள்.ஆனால் நான் நம்பவில்லை.உங்களுக்குத் தெரியாதா என்ன? அரசியல்வாதிகள் எப்படிப் பொய் சொல்வார்கள் என்று?''என்றார் விவசாயி.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment