உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சந்தர்ப்பம்

0

Posted on : Saturday, June 12, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு வியாபாரி பகல் உணவுக்காக விடுதியை நோக்கி சென்றான்.எதிரே வந்த ஒருவன் அவனை நிறுத்தினான்.''என்னை உங்களுக்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை.சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்கு நான் வந்தேன்.அப்போது உங்களிடம் கொஞ்சம் பணம்கேட்டேன்.நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினீர்கள்.ஒரு மனிதனை வெற்றிப்பாதையில்  செல்ல இது வழி வகுக்கட்டும் என்று வாழ்த்திக் கொடுத்தீர்கள்,''என்று சொன்னான்.அந்த வியாபாரி சிறிது யோசித்துவிட்டு ,''ஆமாம்,எனக்கு ஞாபகம் வந்து விட்டது.அப்புறம் சொல்லுங்கள்''என்று ஆவலுடன் கேட்டான்.அதற்கு அவன்,''நல்லது,இப்போதும் அதைப் போல ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கொடுக்க விரும்புகிறீர்களா?''என்று கேட்டான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment