உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

குறிப்பு

0

Posted on : Friday, June 11, 2010 | By : ஜெயராஜன் | In :

ஒரு கிராமத்தில்ஒரு வைத்தியன் எந்த நோயாளியின் வீட்டிற்கு வைத்தியத்திற்குப் போனாலும் அந்த வீட்டு ஜன்னலில் ஒரு சிறு கல்லை எடுத்து வைத்து விட்டுத்தான் மருந்து கொடுப்பான்.''என்னிடம் மருந்து சாப்பிடும் நோயாளி கல்லால் அடித்தாலும் சாக மாட்டான் என்பதற்கு அடையாளமாகத்தான் இப்படிக் கல்லை வைக்கிறேன் ''என்று கூறுவான்.ஒரு முறை ஒரு நோயாளி இறந்து விட்டான்.நோயாளியின் தாயார் வைத்தியரிடம் சண்டைக்குப் போனாள்.''நீங்கள் கல் வைத்தும் என் மகன் இறந்து போய் விட்டானே!''''உங்கள் வீட்டு ஜன்னலில் கல் வைத்ததன் பொருள் என்னவென்றால்,உங்கள் மகன் உங்கள்தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு விடுவான்,பிழைக்க மாட்டான் என்று குறிப்பிடத்தான் கல்லை வைத்தேன்.''என்றான் சாமர்த்தியசாலியான வைத்தியன்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment