உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அத்தான்

0

Posted on : Friday, June 18, 2010 | By : ஜெயராஜன் | In :

அம்மான் சேய் அதாவது மாமாவின் குழந்தை,அம்மாஞ்சி ஆயிற்று.
அத்தை மகன் அத்தான் என்றாயிற்று.
நொய்து என்றால் லேசான என்று பொருள்;அரிசியை விட நொய்தாக இருப்பதால் நொய் அரிசி என்று ஆனது.
அதைவிடச் சிறியது குறு நொய்;அதுவே குருணை ஆயிற்று.
**********
அச்சம் என்பது அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சுதல் ஆகும்.
மடம் என்பது,அனைத்தும் அறிந்தும்,தெரியாதது போல் அடக்கமாக இருப்பது.
நாணம் என்பது வெட்கம்.
பயிர்ப்பு என்பது பிற ஆடவரின் ஸ்பரிசம் அருவருப்பைத் தருவது ஆகும்.
பெண்ணின் இலக்கணமாக முன்னாளில் கருதப்பட்டவை இவை.
**********

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment