அம்மான் சேய் அதாவது மாமாவின் குழந்தை,அம்மாஞ்சி ஆயிற்று.
அத்தை மகன் அத்தான் என்றாயிற்று.
நொய்து என்றால் லேசான என்று பொருள்;அரிசியை விட நொய்தாக இருப்பதால் நொய் அரிசி என்று ஆனது.
அதைவிடச் சிறியது குறு நொய்;அதுவே குருணை ஆயிற்று.
**********
அச்சம் என்பது அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சுதல் ஆகும்.
மடம் என்பது,அனைத்தும் அறிந்தும்,தெரியாதது போல் அடக்கமாக இருப்பது.
நாணம் என்பது வெட்கம்.
பயிர்ப்பு என்பது பிற ஆடவரின் ஸ்பரிசம் அருவருப்பைத் தருவது ஆகும்.
பெண்ணின் இலக்கணமாக முன்னாளில் கருதப்பட்டவை இவை.
**********
|
|
Post a Comment